ஈழத்தவனின் துயரங்களில் பங்கெடுக்காமல் இருப்பவன் தமிழன் என்று சொல்லாதீங்க...
அவன் எந்த பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி... எந்த பெரிய ”தல”யாக இருந்தாலும் சரி.... அவன் தமிழனாக இருக்க தகுதியற்றவன்.நடிகர்களான அஜித்தும், அர்ஜனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இவங்களின் படங்களை உலக நாடுகளில் ஓடும் போது யாரு இந்தப் படத்தை பார்க்கிறான்? ஒரு வெளி நாட்டுக்காரன் பார்க்கமாட்டான் ஒரு தமிழன் தானே பார்க்கிறான் அது யாராக இருக்குமென்று பார்க்தால் அது நம்மட நாட்டுக்காரனாகதான் இருக்கும் நம்மட நாட்டுக்காரன்ட பணம் தேவை ஆனால் நமக்காக குரல் கொடுக்க மாட்டானுகள் பாவிகள் நீங்கள் தின்னுற சோறு யாருட காசிறா?? இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளனர். இன்று முதல் அஜித்,அர்ஜூன் திரைப்படங்களை நாம் புறக்கணிப்போம். எமது மக்கள் படும் இன்னல்களையும் துன்பங்களையும் அவர்கள் அலட்சிய படுத்தி உண்ணா நிலை போராட்டமெல்லாம் எதற்காக என்று கூறியுள்ளார்கள். இப்படி பட்டவர்களுக்கு நாம் இனியும் ஆதரவு வளங்க கூடாது.இவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருந்து அடித்தும் உதைத்தும் கலைக்கப்படவேண்டும். அஜித்தா இப்படி என்று புலம் பெயர் தமிழர்கள் அதிச்சியில் உள்ளார்கள். அஜித் உடனே மன்னிப்பு கேக்கவேனும். அர்ஜுனும்தான் இல்லையேல் உங்கள் படங்கள் ஐரோப்பாவில் இனி ஓடாது .. தமிழர்கள் தன்மானம் தேசிய உணர்வு கொண்டவர்களாக ஆழமாக சிந்திப்பவர்களாக மாறும் காலம் இது!
வனவாசம் காட்டில் அல்ல. வெளி நாடுகளில். ஈழம் கண்ணில் விடியும் வரை எம் இனம் ஏற்றுக்கொண்ட வேஷம் இது. காலச் சுழற்சியில் காத்திருந்து கலைந்த கனவுகள் ஏராளம் ஏராளம். நினைவுகள்... நின்மதிகள்... சொந்த பந்தங்கள் எல்லாமேதான். நான் வாழ்ந்த அந்த அழகான கிராமம் இப்போ அழிந்துவிட்ட கிராமமாம். அகழ் ஆராய்வு செய்கிறார்களாம். எத்தனை ஆயிரம் கனவுகளை அதற்குள் புதைத்துவிட்டு புலம் பெயர்ந்தோம். அகதிகளாய் அநாதைகளானோம். எம் கனவுகளை அகழ்ந்து யார்... எப்போ புதுப்பிப்பார்கள்? ஒரு சிறு நூல் நுனியில் உயிர் ஊசலாட தலை தெறிக்க தடம் மாறினோமே. மயிரளவு கூட உயிருக்கு மரியாதை இல்லாமல் மரித்த நிலையில் மிஞ்சும் உயிரைத் தூக்கிக் கொண்டு தாய் மண் விட்டுத் தூரமாகி தஞ்சம் கேட்டுத் தடுக்கிய நாட்டில் மிஞ்சிய மானமும் மலையேறி விட்டதே. முடிவேயில்லாத குளிர்ந்த இரவுகளின் மடியில் மிச்சம் மீதியிருந்த மன உணர்வுகளும் மடிந்து விட்டன. இப்போதைய தேவை வேலை...வேலை பணம்...பணம். காலை முதல் மாலை வரை களைத்து விழும் உடலுக்கு உணவை ஒதுக்கினாலும் கனவோடு ஓர் படுக்கை. கழற்றிப் போட்ட உடைகள் தலைமாட்டில் காத்திருக்க, குறுகிய இரவு அலாரம் அடிக்க, மீண்டும் மாட்டிக்கோண்டு பனிகூழுக்குள் கால்கள் புதைய ஓட்டம். மாத இறுதியில் மிஞ்சியதை பிய்த்துப் பிரித்து அனுப்பிவிட்டு உடலும் மனமும் களைத்துக் காலில் விழ, மீண்டும் தொடரும் வேண்டாம் என்று சொல்ல முடியா முடிவில்லா மெளனப் பயணம்!!!!! Gth
தமிழச்சியிடம் தாய்ப்பால் பருகிப் பருகி நிமிர்ந்த உன் முதுகெலும்பை தாய் மொழிக்கன்றி வேறெதற்கும் வளைக்கலாமோ ... தாய்மொழி இழந்தவன் தன் முகம் இழந்தவன் தமிழ்ப் பற்று போனவனோ தன் தலையற்றுப் போனவனன்றோ ... நம் மூச்சிலும் காற்றிலும் கன்னித்தமிழ் மணம் என்றும் வீசுதல் வேண்டாமோ ...
நம் இரத்தக் குழாய்களிலும் சுத்தத் தமிழெழுத்துகள் வற்றாது ஓடுதல் கூடாதோ ..... வா தமிழா நல்ல தமிழில் நாம் நாளெல்லாம் பேசுவோம் வா .... தேடுகிறேன் என் செந்தமிழை தேசம் விட்டு தேசம் வந்து தேடுகிறேன் என் செந்தமிழை செல்லுகின்ற தெருவெல்லாம் கேட்பதெல்லாம் செந்தமிழா...? என்னுடன் படிப்பவர் தைப்பதெல்லாம் செந்தமிழா...?
தமிழ் வகுப்பு மாணவர்கள் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? குழந்தை இன்று தாய்தன்னை அழைப்பதுதான் செந்தமிழா...?
நம்மவர் கடை என்று நாம் சென்றால் அவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? நம்மை விட மூத்தவர் கதைக்கிறார் செந்தமிழா...?
அன்றவர் எம்மண்ணில் ஆங்கிலேயம் அடிமை வந்த எம் இரத்தம் இன்று என்ன சும்மாவா விட்டு வைக்கும் ...? உடம்பெல்லாம் ஓடுது எம்மவர்கள் உடம்பெல்லாம்!!
Peace Today Peace is the promise I make today There's nothing greater for me to say Than to lay down my fears Lay down unhappiness And surrender to The peace I choose today
Peace is the gift that I give today No easy shortcut, Peace is the way I will lay down my pride Lay down self-righteousness And surrender to The peace I choose today
My all I give, My love for all My all I give, My love for all
Peace is the reason we're here today No accident, we've been called by name Called to lay down our lives Stand up for greater good And surrender to the peace we choose today
Peace, we choose - today Peace, we bring - today Peace, we live oh-today
Spread the Peace TODAY
Wishing you highest and best blessings every moment, every day, always, and all ways, lovelove, brahmana devi
மனசு கொண்ட மனிதனுக்கு மட்டும்.... கோபங்கள் சில நேரம் - கொஞ்சம் மனசுகளுக்கு முன்னால் மரித்துக்கொள்ள நேரிடுகிறது.... ஆம்.... அது கவனகுறைவா.... அல்லது கணக்குக் குறியா....புரியவில்லை.... சிந்தனைக்கும் கூட வர மறுக்கிறது.... வாழ்க்கை பாதையில் பயணித்தோம் நாம் அதில் வந்துபோகும் சோகங்களும்,சுகங்களும் மனசை ஒத்திப் போடும் ஒருவகை "வாய்தா" ஆம்.... உலகின் பொக்கிஷமான மனசை கொண்ட மனிதனே... தயவுசெய்து அறிவைக் கொண்டு மனிதனை கணக்கு போடாதே... மனசைக் கொண்டு கணக்குப்போடு,அங்கே மகிழ்ச்சி மறுதலிக்கும்... மனசுக்குள் மத்தளம் கொட்டும்.... அது மட்டுமா... மழையே இல்லாமல் ஆனந்தத்தில் நனைந்து கொண்டிருக்கும்... அங்கே...தேகம் குடை பிடிக்கும்.... அந்த மனங்களுக்கு முன்னால் மதங்கள்கூட மகிழ்ச்சி கொள்ளும்.... மனசு மட்டும் சுத்தமாக இருந்தால் படைத்தவன் கூட பாராட்டி.... மனசுக்குள் குடிகொள்வான்.....
http://www.petitiononline.com/urgent1/petition.html